"ப்ரியா, ரெடியா, எவ்வளவு நேரமா கிளம்புவே ?"
" உன்னாலதான் லேட் மா . ஒழுங்கா ஜீன்ஸ் அண்ட் டி ஷர்ட் போட விடாமே பாவாடை தாவணி போடுன்னு சொல்ற. சரியான அவஸ்தை பிடிச்ச டிரஸ். தாவணியிலே ஸ்டிட்ச்சே கிடையாது. பிளவுசிலே ஏகப்பட்ட ஸ்டிட்ச்செஸ். "
"என்னிக்கோ ஒரு நாள் தானே? பாட்டி வில் பி ஸோ ஹாப்பி"
ஒரு வழியாய் ரத்னாவும் ப்ரியாவும் ,ரத்னாவின் அம்மா வீட்டிற்கு கிளம்பி வந்து சேர்ந்தனர் .
"ஹாய் பாட்டி " என்ற ப்ரியா ஆச்சர்யத்துடன் தன்னையே பார்த்த பாட்டியிடம்.. "பாட்டி ப்ளீஸ் , ப்ரில் போட்டு தேச்சுவெச்ச குத்து விளக்கு மாதிரி இருக்கே அப்படின்னு கெக்கே பிக்கேன்னு சொல்லாதே . ஒரே அவஸ்தை இந்த தாவணி " என்று உரிமையோடு பொய்யாக கோபித்துக்கொண்டாள் .
ரத்னாவை பார்த்து பரிமளம் , "அவள் இஷ்டத்துக்கு டிரஸ் பண்ணிக்க விடேன்." என்றாளே பார்க்கலாம்.!
ரத்னா தன் அம்மாவை முறைத்துக்கொண்டே ,"என்னம்மா இப்படி கவுத்துட்டே என்னை. இந்த சுதந்திரம் எனக்கு காலேஜ் போகும்போது குடுத்தியா நீ? " என்றாள்.
"பாட்டி, குழியப்பம் கூட கெட்சப் இருக்கா ?" என்று கேட்டுக்கொண்டே தட்டில் போட்டு எடுத்துக்கொண்டு தாத்தாவுடன் டிவி பார்க்க சென்றுவிட்டாள் ப்ரியா.
"பேப்பர்லே ரெண்டுநாள் முன்னாடி கூட கண்றாவி நியூஸ் ,யாரோ ஒருத்தன் 10 வயசு பெண் குழந்தையை பலாத்காரம் பண்ணிட்டானாம் .என்ன ஜென்மங்களோ...
இதுக்கெல்லாம் பார்த்தா இடுப்பு தெரியற தாவணிக்கு பதில் முழுசா கவர் பண்ற ஜீன்ஸ் டீ ஷர்ட் எவ்வளவோ பெட்டர் " என்று அங்கலாய்த்தாள் பரிமளம்.
" உனக்காக இன்னிக்கு போட்டுக்க சம்மதிச்சா. இல்லேன்னா அவள் இஷ்டப்படி தான் டிரஸ்.இந்த காலத்து பசங்க ரொம்ப ஸ்மார்ட். அடக்கமாகவும் அதே சமயம் சௌகர்யமாகவும் டிரஸ் பண்ணிக்க தெரியும். ஆனா ஒருத்தர் போடற ட்ரெஸ்ஸுக்கும், கேடு கெட்ட ராஸ்கல்ஸ் பலாத்காரம் பண்றதுக்கும், சம்பந்தமே இல்லம்மா .. .. " என்றாள் ரத்னா.
" நீ இப்படி காலத்துக்கு ஏற்ற மாதிரி கண்ணோட்டத்தை மாத்திக்கறது ரொம்போ பெருமையா இருக்கு " என்று சொன்ன ரத்னா திடீரென தன் தாய் விசும்புவதை கவனித்தாள்...
பதட்டத்துடன் "என்னம்மா ? அப்பாவோட சண்டையா ? ஏன் அழறே ?" என்றாள் .
"இல்லை ரத்னா ...இந்த பலாத்கார நியூஸ் என்னை ரொம்பவே பாதித்துவிட்டது ..வீட்டு மாப்பிள்ளை என்ற ஹோதாவில் உங்க அத்தை புருஷன் , அதான் அந்த படுபாவி , உன்கிட்ட தப்பா நடந்துண்டதை, நீ ஆறாவது படிக்கும் போது திக்கி திணறி என்கிட்டே சொல்ல வந்த போது நான் அப்பிராணியா இருந்திட்டேனே .. உன்னை காப்பதலே ..ரொம்பவும் தப்பு பண்ணிட்டேன்... "
அந்த படுபாவி , இப்போ நல்லவனா நடிக்கறான் என்றும் , நரகம் தான் அவனுக்கு நிச்சயம் என்றும் அரற்றிக்கொண்டே அழுதாள் பரிமளம்.
"என்னை மன்னிப்பியா ரத்னா ?" என்று நொந்து போய்க்கேட்ட பரிமளத்தை பார்க்க சங்கடமாய் இருந்தது ரத்னாவிற்கு.
" நீ வேணும்னு பண்ணலேம்மா. உனக்கு அப்படி நடக்கும்னு ஒரு கிஞ்சித்தும் சந்தேகம் வரலே . நீ என்ன பண்ணுவே"....என்றாள் ரத்னா எங்கேயோ பார்த்துக்கொண்டு ..
"அப்போ நான் கோட்டை விட்டுட்டேன், ரத்னா..ஆனா நேற்று நானும் அப்பாவும் அந்த கேடுகெட்டவன் வீட்டுக்கு போய் நாக்கை பிடுங்கிக்கற மாதிரி எல்லாத்தையும் சொல்லி கேட்டுட்டு வந்தோம்" என்று பரிமளம் சொல்லும் போது தான், எங்கோ நிலை குத்தி நின்ற ரத்னாவின் பார்வை, மீண்டும் பரிமளம் பக்கம் ஆச்சர்யத்தோடு திரும்பியது.
அத்தையும் அந்த கேடு கெட்டவனும் ஆடிப்போய்விட்டனர் என்று கூறிய பரிமளத்தை பார்த்து ,"எப்படிம்மா இவ்வளவு தைரியம் வந்தது உங்களுக்கு " என்று வியப்பு மாறாமல் கேட்டாள் ரத்னா.
தன் மகள் பட்ட கஷ்டத்துக்கு, தானே ஒரு காரணமாக ஆகிவிட்டோமோ என்ற குற்றஉணர்வு தந்த உத்வேகம் தான் அந்த தைரியத்திற்கு காரணம் என்றாள் பரிமளம்.
"அப்புறம்? " என்றாள் ரத்னா தன் காதையே நம்ப முடியாமல்..
" அப்புறம் என்ன, அந்த சண்டாளனைப் பத்தி தெரியும் போல இருக்கு அத்தைக்கு ..அவள் மட்டும் விசும்பிக்கொண்டே இருந்தாள். அவன் கற்பூரம் அடிச்சு சத்தியம் அப்படி இப்படின்னு பினாத்தினான் ..அதற்கு அப்பா, எந்த கோவில் ,சாமி முன்னாடி சத்தியம் போட்டாலும் செல்லாதுடா, மன்னிப்பே கிடையாது உனக்கு என்று சொல்லிவிட்டு அங்கே நிற்கப் பிடிக்காமல், திரும்பி பார்க்காமல் வந்து விட்டோம் " என்று மேலும் கீழும் மூச்சு இறைக்க ஆவேசத்தோடு சொல்லி முடித்தாள் பரிமளம்.
"வாவ் , ஆசம் பாட்டி ! நீ எங்க அம்மாவோட ரொம்போ தைரியம் " என்று ஓடி வந்து பரிமளத்தை கட்டி கொண்டாள், பாட்டி அழும் சத்தம் கேட்டு அமைதியாக இதை எல்லாம் பின்னாலிருந்து தாத்தாவுடன் கேட்டுக்கொண்டிருந்த ப்ரியா !
சற்றே திகைத்துப்போன பரிமளம், ப்ரியாவிற்கு இதெல்லாம் தெரியுமா என்று கலக்கத்துடன் கேட்டாள்.
" ஸ்வீட் பாட்டி, எனக்கு நடந்தது எல்லாம் தெரியும். என்னை இந்த மாதிரி ஆபத்திலிருந்து காப்பாத்திக்கவும் தெரியும். அம்மா சொல்லி குடுத்திருக்கா " என்றாள் பாட்டியை மேலும் இறுக்கிய ப்ரியா.
ரத்னாவிற்கு தன்னை நெருக்கிக் கொண்டிருந்த ஏதோ ஒன்று சட்டென அவிழ்ந்தது போலவும் ..முதுகெலும்பு சற்றே நேராய் ஆனதுபோலவும் , தன்னை சுற்றியுள்ள எல்லாமும் எல்லாரும் புதிதாய் தெரிவது போலவும் இருந்தது.
"இது போதும்மா எனக்கு ..மன்னிக்க மாட்டேன். ஆனா இனிமேல் மறப்பது சுலபம் " என்று ரத்னா சொல்லும்போது எல்லோர் கண்ணிலும் கண்ணீர் ..கூடவே உதட்டில் புன்னகையும் ..முகத்தில் தெளிவும் .
"ஒரு கொடும்பாவி, நல்லவனாக எல்லோர் முன்னால் தெரிவது காலப்பிழையினால் வந்த காட்சிப்பிழை தான்.
இதில் உன் பிழை எதுவும் இல்லை" என்று ரத்னாவின் தலையை வாஞ்சையுடன் வருடிக்கொண்டே சொன்னார் அவள் அப்பா, ஒய்வு பெற்ற தமிழ் பேராசிரியர்.
"வாவ் ,தாத்தா !" எனக்கும் புரியற தமிழிலே சொல்ல முடியுமா ?" என்றாள் ப்ரியா !!
அது ஓண்ணும் இல்லேம்மா , கொஞ்சம் லேட்டா அக்யூஸ் பண்ணினால் ,அவன் அதுவரைக்கும் நல்லவனா தெரியறது வெறும் மிராஜ் எபக்ட் தான். காட்சிப்பிழை.
காலப்பிழையினால் வந்த காட்சிப்பிழை.
இதில் உன் பிழை எதுவும் இல்லை" என்று ரத்னாவின் தலையை வாஞ்சையுடன் வருடிக்கொண்டே சொன்னார் அவள் அப்பா, ஒய்வு பெற்ற தமிழ் பேராசிரியர்.
"வாவ் ,தாத்தா !" எனக்கும் புரியற தமிழிலே சொல்ல முடியுமா ?" என்றாள் ப்ரியா !!
அது ஓண்ணும் இல்லேம்மா , கொஞ்சம் லேட்டா அக்யூஸ் பண்ணினால் ,அவன் அதுவரைக்கும் நல்லவனா தெரியறது வெறும் மிராஜ் எபக்ட் தான். காட்சிப்பிழை.
காலப்பிழையினால் வந்த காட்சிப்பிழை.
வருடந்தோறும் ஏப்ரல் மாதம் தேசிய அளவில் குழந்தைகள் மேலான வன்முறை தடுப்பு மாதமாக அனுசரிக்கப்படுகிறது.
April every year is observed as National Child Abuse Prevention month.
.
1 comment:
It's nice and a lesson for both parents and children.most would wish to do what Parimalam patti
Post a Comment